Archives

குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

குத்புல் அக்தாப், அஸ்ஸெய்யித் அஷ்-ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 48ஆவது கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

வருடா வருடம் நடைபெற்றுவரும் இம்மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இம்முறையும் முரீதீன்கள் முஹிப்பீன்களால் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்மா மஸ்ஜிதில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05.12.2015 சனிக்கிழமை அஸர் தொழுகையுடன் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும். அதே தினம் மஃரிபுடன் பயான் நிகழ்சிகள் ஆரம்பமாகும்

07.12.2015 வரை பயான் நிகழ்வுகள் நடைபெறும்.

08.12.2015 மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை பிறை FM இல் நேரடி அஞ்சல் செய்யப்படும்

இறுதி நாளான 09.12.2015 புதன்கிழமை சஹன் சாப்பாடு வழங்கப்படும்

நிகழ்வுகள் யாவும் கலீபத்துல் ஹல்லாஜ் குத்புஸ் ஸமான் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும்.

Muharram Day

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

15.10.2015 வியாழக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மகாம் ஜும்ஆ பள்ளிவாசலில் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் ஒழுங்கு இடம்பெற்றன.

கலீபத்துல் ஹல்லாஜ் குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா (றஹ்) அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் நூறூல் இர்ஃபான் அறபிக் கல்லூரி அதிபர் மௌலவி அல்ஹாஜ் A.K. நழீம் (ஷர்க்கி) BA, PGDE, JP கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி நிஷாத்(ஷர்க்கி) BA உட்பட இன்னும் உலமாக்கள், முரீதீன்கள் முஹிப்பீன்களும் கலந்து சிறப்பித்தனர்.

நூறூல் இர்ஃபான் அறபிக்கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சிகள், பயான் மற்றும் துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இன்றைய தினம் ஹதீஸ்; மத்ஹப் உட்பட தஸவ்வுஃப் (மெய்ஞ்ஞானத்தி)ற்குரிய இமாம்களும் கௌரவிக்கப்பட்டனர்.  அத்துடன் குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா (றஹ்) அவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது.