Archives

Grand Feast 1434 (2013)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

கடந்த 18.10.2013 தொடக்கம் 29.10.2013 வரை அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின்  09வதும்,

அல்-குத்ப்,  அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் முஹம்மத் ஜலாலுத்தீன்  நாயகம்(றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின்  46வதும்

வருட கத்தமுல் குர்-ஆன், கந்தூரி வைபவங்கள் அதி சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் கலீபத்துல் ஹல்லாஜ் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

18.10.2013 துல்ஹஜ் பிறை 12 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் இஸ்லாமிய இலட்சினையான கொடி ஷெய்குனாவின் முரீதீன்களான ஜனாப் M.I.பியாஸ் ஏந்திக் கொடுக்க ஜனாப் M.A.A.வாஹித் (MSc) (ADE-Science), HEDS International Hallaj Building உரிமையாளர் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் 10 நாட்கள் குத்புனா ஹல்லாஜ் மன்ஸூர் நாயகம் (றலி) அவர்களின் அன்புப் பேரர் அஸ்-ஸெய்யித் மௌலவி P.A. முஹம்மத் மஹ்றூப் (லத்தீபி) தங்கள் அவர்களின் தலைமையில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களால் உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பட்டன.

28.10.2013 காலை 10:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆனும் அதே தினம் மாலை 04:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றன.

29.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணி முதல் மௌலீது வைபவமும் நடைபெற்றன. நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானத்திற்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்களால் ஓதப்பட்டு கந்தூரியும் வழங்கப்பட்டது.

கந்தூரி வைபவங்கள் ஷேகுனாவின் சாதிக்கான முரீதாகிய அல்-ஹாஜ் A.S.M சாதிக் (JP-All Island) அவர்களின் மேற்பார்வையின் கீழ் இனிதே நடைபெற்றன.

நிகழ்வுகளில் மாண்புமிகு அமைச்சர் ALM அதாஉல்லாஹ், குத்புனா மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களின் மருமகனும் மாண்புமிகு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் MH அப்துஸ் ஸமது மேன்மை தங்கிய மேயர் A அஹமட் ஸகீ,   நாட்டின் பல பாகங்களிலிருந்தும், மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்பான புகைப்படங்கள் சில,

01

02

03

04

05

07

08

09

10

11

12

13

14

15

16

17

19

20

21

22

%%wppa%% %%slideonly=18%%

%%wppa%% %%slideonly=19%%

MADRASA NOORUL IRFAN ARABIC COLLEGE

மதரஸா நூறுல் இர்ஃபான் அறபுக்கல்லூரி,
(MADARASA NOORUL IRFAN ARABIC COLLEGE),
(குன்னதேறி, ஆல்வாய், இறனைக்குளம், கேரளா, இந்தியா)

Figure _ 11_Noorul Irfan Arabic College

குத்புனா ஜலாலுத்தீன் ஷெய்க் அவர்கள் 1909 ஆம் ஆண்டு அந்த்ரோத் தீவு  எனும் ஊரில் பிறந்தார்கள். அல்குத்ப்-ஷெய்குனா அஸ்-ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் அல்-ஐதரூஸிய்யி ஜீலிய்யுன் நூரிய்யி அவர்கள் A.I.முஹம்மத் முத்துக்கோயாத்தங்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இவரது அயராத முயற்சியால் ஹிஜ்ரி 1387 ரபீயூல் அவ்வல் (AD 1967)ல் நூறுல் இர்பான் என்ற ஒரு அறபுக் கல்லூரியை ஆழுவாய் (குன்னத்தேறி) ஆரம்பித்து வைத்தார்கள். அவரில் நல்லெண்ணம் கொண்ட அவரை நன்கு தெரிந்தவர்களும், ஏனைய கல்வியில், ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த அறபுக் கல்லூரிக்கு உதவினர். ஷெய்குனா ஜலாலுத்தின் அவர்களின் பாத்தினுக்குரிய கிலாஃபத்தைப் பெற்ற ஹல்லாஜ் மன்ஸூர் P.A ஸெய்யித் முஹம்மத் கோயாத் தங்கள் அவர்கள் இம்மதரஸாவிற்கும், மக்பராவிற்கும் தன்னாலான உதவிகளைச் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷெய்குனா ஜலாலுத்தீன் குத்திஸ்ஸிர்ரஹூ அவர்கள் மறைந்து நாப்பதாவது நாள் இவரின் கட்டளைப்படி இவரைச் சேர்ந்த மக்களால் அன்னாரின் ழாஹிருக்குரிய கிலாஃபத்தை பெற்ற இவர் மகனான ஷெய்குனா ஷிஹாபுத்தின் கோயாத் தங்கள் M.A. அவர்களே இந்த நூறுல் இர்பான் அறபுக் கல்லூரியின் அதிபராக இருந்து சேவை செய்து வருகிறார். இவரது அயராத முயற்சியால் கலிக்கட் சர்வகலாசாலையோடு இணைந்து கணிதம், விஞ்ஞானம் மற்றும் சகல துறைகளிலும் ஆலிம் அல் இர்பானி என்ற பட்டத்துடன் பட்டதாரிகள் இந்த அரபுக் கல்லூரியிலிருந்து வெளியாவது பாராட்டத்தக்க விடயமாகும். இந்த அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் 08 வருடங்களாகும்.

1967ல் ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி ஸெய்யித் ஸெய்னுத்தீன் M.K. செரிய கோயாத் தங்கள் இருவரும் பாடங்களை ஆரம்பித்து நடத்தினர். 1983 தொடக்கம் இற்றை வரை ஜலாலுத்தீன் ஷெய்குனாவின் மகன் அஷ்-ஷெய்க் ஷிஹாபுத்தீன் கோயாத் தங்கள் பாடங்களை நடத்தி வருகின்றார்.

இங்கு நடக்கின்ற ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவின் போதும் ஹைதராபாத் அப்துல் காதிர் ஸூஃபி நாயகத்தின் பேரர் கலந்து சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மதரஸாவில் ஃபிக்ஹ், ஹதீஸ், தஃப்ஸீர், மஆனி, மன்திக், தாரீஃக், அல் அதப் போன்ற பாடங்களுடன் இல்முத் தஸவ்வுஃப் (மெய்ஞ்ஞானவியல்) விஷேடமாக கற்பிக்கப்படுகின்றது. ஏனெனில் இதன் ஸ்தாபகரான குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் குத்திஸ்ஸிர்ரஹூ அவர்கள் இல்முத் தஸவ்வுஃபில் புகழ் பெற்ற ஒருவராக இருந்ததால் அவர் ஆரம்பித்த கல்லூரிக்கு நூறுல் இர்ஃபான் -மெய்ஞ்ஞான ஒளி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இவரிடம் சிறு வயதிலிருந்தே இல்முத் தஸவ்வுஃபைக் கற்று முதன்மை அடைந்த குத்புனா ஹல்லாஜூல் மன்ஸூர் P.A ஷெய்க் முஹம்மத் கோயாத்தங்கள் அவர்கள் பாத்தினுக்குரிய கிலாஃபத்தைப் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.